Posts

Showing posts from 2019

குரங்கு

குரங்கு - முயற்சி செய்யா மனிதன். மனிதன்  முயற்சி செய்த குரங்கு.

பிரார்த்தனை, வேண்டுதல், விரதம் etc..

அமைதியான பண்டமாற்று  வியாபாரம்.  நான் இப்போது கோவிலுக்குள்ளே ! பூசை, பஜனை,  ஆட்டம்  பாட்டம், கூட்டம் எல்லாம்  ஆயிற்று - அடுத்தது வேண்டுதல். பிரசாதம், படையல் எல்லாம்  உள்ளே எடுத்துவை -இன்று  நான் விரதம்.  வேண்டுதல்  மந்திரம், தந்திரம் எல்லாம் உண்டு  பூசை, படையல் கூட உண்டு  சிறப்பு தரிசன சேவை உண்டு  மந்திரி, நடிகர், நடிகை வரவும் உண்டு  உண்டியல் நிச்சயம் பெரிதாய் உண்டு  வெங்காய விலை பற்றி உனக்கேன்  கவலை.?  சர்க்கரை பொங்கலுக்கு அது தேவை  இல்லை நாளை ஞாயிறு, கூட்டம் அள்ளும்   உனக்கும் இங்கே வேலை அதிகம்  சிறப்பு தரிசன சேவையில் வந்தேன்  சீக்கிரம் உன்னை பார்த்து முடித்தேன். வேண்டுதல் யாவையும்  தீர்த்து வைப்பாய்  உன் புகழும் நீ காத்து நிற்பாய்.

அப்பா, முதுமை, மரணம்

ஐந்து வயதில் அப்பா இறந்துபோனால் அப்படி அழும் பிள்ளை,   தன் அறுபது வயதில் எண்பது வயது தந்தை இறக்கும் போது அவ்வளவு கலங்காதது ஏன்?.  அப்பாவின் முக்கியத்துவம்  குறைந்து விட்டதோ?  காசும், பணமும், சுற்றமும், நட்பும் அப்பாவின் முக்கித்துவதை குறைத்து விட்டது. இந்த பாசம், நேசம் எல்லாம் பொய்யோ?  நினைத்து பாருங்கள் உங்கள் ஐந்து வயது முதல் மீசை முளைத்து "எல்லாம் எனக்கு தெரியும் " என்று சொல்ல ஆரம்பித்த நாள்  வரை..  அப்பா எப்போ வீடு திரும்புவார் என்று காத்திருந்த மாலை நேரங்கள்,  உலகத்தில் எல்லாம் வல்ல வீரனாய் அப்பாவை நினைத்து இருந்த நாட்கள்.. இதுதான் இயற்கை,  இங்கு எல்லாம் தேவைகள் பொருட்டே,  அப்பா,  அம்மா,  பாசம்  நேசம், நண்பன், மனைவி, மக்கள், அரசு எல்லாம் ஒருவர் தேவை மற்றவர் பூர்த்தி செய்யும் வரைதான்.  இது புரியாமல் தான் நாம் மிகவும் குழப்பமுருகிறோம். எனக்கும் இப்போது ஐம்பது வயது,  என் தந்தையிடம் பேசி ஒரு வாரம் ஆகிறது.    மருந்து,  மாத்திரை,  வேளைக்கு உணவு,  உடை, நல்ல இருப்பிடம்,...

மரணம், இறைவன்

  ஒவ்வொரு மூச்சும் புதிய பிறப்பு  ஒவ்வொரு மூச்சும் புதிய இறப்பு  நேற்றும் இல்லை நாளையும் இல்லை  இன்று என்பது நிரந்தரம் இல்லை  அழிவு  இன்றி  ஆக்கம் இங்கில்லை  அமைதி காக்க மரணம் அவசியம்  மரணம்  காக்க யுத்தம் அவசியம்  அமைதியும், யுத்தமும் அண்ணன் தம்பி  மரணம் பெற்ற இரட்டை பிறவி.  ஆறாம் அறிவால் அவஸ்தைகள் அதிகம்.  ஆறாம் அறிவால் ஆனது என்ன?  கடவுள் படைத்தோம்,  மரணம் மறக்க. மரணம் நம்மை மறக்கவில்லை  இதுவரை நம்மிடம் தோற்கவில்லை. ஆயிரம் ஆயிரம் கோவில்கள் செய்தோம்  காலம் வென்ற கோட்டைகள் செய்தோம் கோட்டையும், கோவிலும் நின்றது இங்கே  கோட்டையும் கோவிலும் செய்தவன் எங்கே?  எதுவும் இங்கே நிரந்தரம் இல்லை  நமதென்று இங்கே எதுவுமில்லை  கடனாய் உடம்பு, கடனாய் மூச்சு  கடனாய் காதல், கடனாய் காமம்  கடனாய் கடவுள், கடனாய் ஞானம்  வீரம், வெற்றி, எல்லாம் கடன்தான்  வீணே இந்த அலட்டல் எதற்கு  கோபம் குறைப்போம், அன்பை வளர்ப்போம்  அமைதியாக அன்பு செய்வோம்  அன்பு மட்டுமே தேவை இ...

சேல்ஸ்மேன்

காபி, டீ, நாலு தம் டை, பொய் லேப்டாப்,  கஸ்டமர், டார்கெட்  லிப்ஸ்டிக், பௌடர்  பூ, லோ ஹிப், மாமா  சேல்ஸ்மேன்

முதுமை

முதுமை என்பது இன்னொறு துவக்கம் வாழ்வின் இதுவே கடைசி துவக்கம் பயணக்களைப்பு  நிச்சயம் இருக்கும் மறுபடி வாழ்திட மனது துடிக்கும் பயணக்களைப்பு மனதை அடக்கும். தனிமை இல்லா முதுமை வேண்டும் கூப்பிடு தூரம் சுற்றம் வேண்டும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிச்சயம் வேண்டும் போதும் என்ற எண்ணம் வேண்டும் விலகி நிற்கும் பக்குவம் வேண்டும் சிவ சிந்தனை எனை ஆட்கொள்ள வேண்டும் மெதுவாய் ‘இதனை’ மறந்திட வேண்டும் மகிழ்சியான மரணம் வேண்டும்..

அனுபவம்

அனுபவம்  சிவம் எம் சிந்தையில் நிறைந்ததது  நிறைந்த சிந்தனை நித்திரை குறைத்தது  கனவிலே சிவனை  கண்டேன்,  காட்சி நினைவில் உறையக் கண்டேன்  சிவனடியார் சிலரையும் கண்டேன்,   லிங்கம் கனவில் தோன்ற கண்டேன்  பார்வதி, முருகன், கணபதி என  குடும்பம் முழுவதும் கூடவே கண்டேன்  சூசகமாய் சொன்னாய்  செய்தி,  சொன்ன செய்தி விளங்கவில்லை,  இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை, .  எவரையும் கேட்க தோன்றவில்லை  அமைதியின்  அனுபவம் தொடர்ந்தது  நெஞ்சில் நின்ற அச்சம் அகன்றது  செய்யும் செயலில் கவனம் வளர்ந்தது  எதிர்பார்பற்ற எண்ணம் வளர்ந்தது கருவமும் கொஞ்சம் கூட வளர்ந்தது   பயணம் இன்னும் தொடங்கவில்லை  என் மனம் இதனை  அறியவில்லை  கூச்சல், குழப்பம் அடங்கவில்லை  விளம்பரம் இன்னும் வீழவில்லை  தேடல் இங்கே எல்லோர்க்கும் உண்டு  தேவைகேற்ற தேடுதல் இல்லை  தேவை எதுவென்று தெரியவில்லை  ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவரும்  படிப்பும்,  பட்டமும், வீடும், வாசலும்  பொன்னும், பொருளும், ஆடலும் ப...

படைத்தல்

 படைப்பு எனக்கொரு கேள்வி என்னைப்ற்றி  நான் ஏன் இவ்விதம், இந்நிறம், இக்குணம் கலந்து பிறந்தேன், நான் ஏன் என் முன்னவர் குறைகளை ஏற்று  பிறந்தேன்? பாட்டன், மாமன் மற்றும் சிற்றப்பன் என எல்லார் சாயலும் கலந்து பிறந்தேன். மரபணுவின் தாக்கம் என்றனர், மரபணு என்பது குறைகளையும் சுமக்கும் அணுவா? மரபெனக்குஎதற்கு? நானோ புதியவன், பழைய குப்பைகள் எனக்கெதற்கு? யுகம் யுகமாக நிகழும் செயலிது யுகம் யுகமாக நடக்கும் தவறிது படைப்பவனுக்கு அறிவுரை அவசியம் படைப்பவனுக்கு  விடுமுரை அவசியம் படைக்கும் முறையில் திருத்தம் அவசியம் படைப்பு தொழிலில் மாற்றம் அவசியம் உடலை செலுத்துவது உயிர் என்றெனில், உயிரின் ஊடே முன்வினை வருமெனில் உயிரின் பதிப்பில் மாற்றம் அவசியம் புதிய பதிப்பில் பழவினை அகலும் புதிய உடலும் புதிய உயிர் பெரும் புதிய உயிர்கள் புவில் வலம் வரும். உடலுடன் உயிரும் சேர்ந்தே அழியும் மரபென்பதே இல்லாது போகும் பழையன கழிதலும் புதியன புகுதலும் படைப்பிலும்   நிகழும். ------------

பயணம்

தன்னை அறிதல் என்பது என்ன? தன்னை அறிந்தால் என்ன கிடைக்கும்? ஏதாவது கிடைக்கும் என்றால், தன்னை அறிந்தவர் எங்கும் இருப்பரே.. தன்னை அறிதல் உலகின் பொருட்டா? புகழை அடையும் ஆசையின் பொருட்டா? ஆசையை விட்டொழி என்றனர் பெரியோர் தனை அறிய விழைவதும் ஆசை தானே? பற்பல  முனிகள்,  பெரியோர், தவசிகள் எல்லாம் முயன்று பார்த்த ஆட்டம் தானே. என்னை நான் ஏன் உணர்ந்திட வேண்டும் எனக்கு மட்டும் ஏன் இந்த கேள்வி.. நண்பர்கள், சுற்றம் மற்றவரெல்லாம் எள்ளி நகைத்தனர், அடுத்த களவு சாமியார் என்றனர்.. தன்னுள் புகுந்து ரமணன் அறிந்ததும், அண்ணாமலையா என்று அமர்ந்ததும், சாவை வாழ்ந்து உணர்ந்ததும், தன்னை அறிந்ததின் அனுபவம் தானே.. அவர் அவர் அனுபவம் அவரவருக்கு மற்றவருக்கு முழுதும் மொழிந்திட இயலா தேடும் வழியும், மொழியும்,  தேவைக்கேற்ப அருள் அமைத்து அளிக்கும். குழப்பமுற்றேன் குருவை நினைந்தேன் புருவ மத்தியில் நினைவை நிறுத்தி குருவை அழைத்தேன், அருளிட பணித்தேன் நினைவுகள் அலையில் குருவை மறந்தேன் பயணம் தொடரும்...

குரு பெயர்ச்சி

  முருகன்,  சிவன்,  திருமால் என்பதெல்லாம் பேரொளியின் பல பல நிறமோ? வகையோ? பண்டைய கேள்வி, பலரும் பலமுறை கேட்ட கேள்வி நானும் ஒரு முறை கேட்டுப்பார்த்தேன் குருவை அடையும் அவாவை அடைந்தேன் அறியா குருவை நினைந்து அழுதேன் திருமால் நாமம் தினமும் இசைத்தேன் திருமால் சிவனை நெஞ்சில் நிறைத்தான் சிவனோ குமரனே தன் குரு என்றான் முருகா முருகா என்று மொழிந்தேன் குருவாய் வருவாய் என்று நெகிழ்ந்தேன் குருவாய் முருகன் வரவும் மகிழ்ந்தேன் குருவை அறிதல் கடினம் கடினம் குருவின் தேடல் அருளால் நிகழும் பயணம் பலரும் உதவிட நிகழும் குருவே குருவே குருவே சரணம். முருகா அழகா முதலின் முதலே வள்ளி மணாளா,  சிவனின் சிவனே எனை நீ ஆட்கொண்ட விதம் அறிவேன் ஆட்கொண்ட நீ அகலாதிருப்பாய், உன்பதம் மறவாதிருக்க நீ எனக்கருள்வாய் உணர்வு உயர்ந்து உயிரை உணர நீ எனக்கு அருள்வாய் அண்ணாமலை முனி போல் பாடவல்லேன் அவ்வை போல் உன்னை அழைக்க வல்லேன் சிறுவன் எனதாசை எல்லாம் சிறிதே உரைப்பேன் சிவம் செய்த இவ்உயிர் செப்பனே வாழ வேண்டிய யாவும் இனிதே அருள்வாய், நானும் நீயும் வெவ்வேறு இலையே? எங்கும் நிறைந்த பேரொளி நீயே என்னில் உன்னை உணர்வது எவ்வனம்?...

மரணம் hiku

மரணம்,  இது  காற்றில் கரையும் பூ மணம். மரணம்,  எல்லோர்க்கும் பொதுவிது,  எமதர்மன் பரிசிது  மரணம்,  அழுகையில் தொடங்கி  அழுகையில் முடியும்  காட்சி மாற்றம்.  

வேலைக்காரி & Hiku

காற்றோடு குழல் ஆட, முன் நெற்றி நரை ஆட  சற்றே தளர்ந்த நடையோடு ,  கண்களில் களைப்போடு  தோளிலே பையோடு, கைபேசி துணையோடு  தினம் எங்கள் இல்லம் வருபவள்  - வேலைக்காரி Hiku அம்மன் கோயிலில் நடை  சாற்றியாகிவிட்டது.  அம்மா இன்னும்  அலுவலகத்தில்..

தேவைகள்

நல்ல பெற்றோர், உறவுகள் வேண்டும் தாயை மதிக்கும் தந்தை வேண்டும் புரிந்து பழகும் தோழமை வேண்டும் தூய்மையான இல்லம் வேண்டும் நல்ல காற்று, குடிநீர் வேண்டும் எச்சில் இல்லா பண்டம் வேண்டும் எளிமையான உணவு வேண்டும் சோம்பல், சலிப்பில்லாத வாழ்கை வேண்டும் நன்றி மறவா நெஞ்சம் வேண்டும் எல்லோற்குதவும் எண்ணம் வேண்டும் உதவிட வேண்டிய வசதிகள் வேண்டும் இயற்கை ,விலங்கு ,பறவை எல்லாம் கருணையோடு மதித்திட வேண்டும் நித்திரை நித்தம் நிகழ வேண்டும் பூமியை வலம் வரும் ஆர்வம் வேண்டும் தேடல் என்பது இயல்பாய் வேண்டும் குருவின் திருவருள் அமைய வேண்டும் மரணம் பற்றிய புரிதல் வேண்டும் புரிந்த பின்னே மரணம் வேண்டும்

78

------------------------------------------------------- எழுவத்தெட்டு வயசாச்சு,  எல்லாம்  பாத்தாச்சு,  கண்ணு  முழிச்சாச்சு,   முழிச்சி என்ன செய்ய?  வேலை வெட்டி ஏதுமில்ல. கண் பார்வை மங்கலாச்சு.  காதும் இங்கே பொத்தலாச்சு.  தடி ஊண தெரியவில்ல. நடமாட முடியவில்ல. நாசமா போன நாக்கு,  என் பேச்சை கேட்கவில்ல. எனக்கிங்கே  சலிப்பாச்சு. எம் பொழப்பு சிரிப்பாச்சு. கோவம் தான் அதிகமாச்சு. யார் மேல கோவம் கொள்ள?  வயசான கோவத்துக்கு,  யார் இங்கே பயப்படுவா?  என் மகனும் அரை கிழவன்,  அவனுக்கு ஆயிரம் வேல.  இடை இடையே என் கவல. பேரனுக்கும், பேத்திக்கும். எனக்காக நேரமில்ல. மருமகளும் நல்லவதான்  மகள போலாவதான்  அலுவலக வேலையாலே  அவ பொழப்பு நாய் பொழப்பு என்ன கவனிக்க அவளுக்கு நேரம் எங்க.  அம்பது வருசமா என்னோட கூட்டாளி. அவதான் என் பொண்டாட்டி. அவ என்ன சின்ன பொண்ணா,  அப்படியே இருப்பதுக்கு?  கை வலிக்கும், கால் வலிக்கும்,  அவளுக்கும் காச்சல் வரும். எனக்கு  பொறுமை இல்ல. அவ நிலைமை புரியவில்ல.  வீட்டு க...

பொண்டாட்டி

Image
அடி பொன்னே என் பொண்டாட்டி,   நீயே என் வப்பாட்டி  காதோரம் நரை இருக்கு  அத கொஞ்சம் கறுப்பாக்கு  நாப்பது வயசுலயும்  நடிகையெல்லாம் குமரி ஆச்சு  நீ கொஞ்சம் மனசு வெச்சா  மறுபடியும் இருபதுதான்.  நாப்பதிலே நாய் குணம் தான்  நானும் இங்கே நாப்பதுதான்  எரிச்சலும், இரைச்சலும் சகஜம்தான்  கொஞ்சம் முயற்சி செஞ்சா  ரெண்டு பேரும் இருபதுதான்  மனசு இங்கே இருபதானா  மாயம் தான் தெனம் இங்க  மனசு தான் எல்லாம் இங்க  மத்ததெல்லாம் அப்பரம் தான்  -----------------------   ..........    

பெண்

பெண்ணிற்கு பெண்ணிடம் விடுதலை வேண்டும் பெண்மை பற்றிய புரிதல் வேண்டும் பெண்கள் இங்கே அனுமன் போல தன் பலம் அறியாது தவிக்கும் கூட்டம் பெண் குழந்தைகள் இங்கே பிறந்திட வேண்டும் வளரும் சூழல் நலமாய் வேண்டும் பெண்ணின் மன நலம் காத்திட வேண்டும் கல்வி முறையாய் கிடைத்திட வேண்டும் இதில் ஆணின் பங்கு நிச்சயம் வேண்டும் ஆணின் புரிதல் அவசியம் இங்கு தாயும் ,தமக்கையும் ,தாரமும் பெண்ணே முகமும் ,மார்பும் ,வயிறும் தாண்டி பெண்ணை அறிய முயல வேண்டும் ஆணுக்கிங்கே பெண் கல்வி வேண்டும் பாடமுறையில் புதுமை வேண்டும்

காத்திருத்தல்

This is about an husband waiting for his working wife to come home...  அடியே என் இவளே  இத்தனை நேரமாச்சு, இன்னும்  ஏன் காணவில்ல. பொறுத்து பொறுத்து இங்கே  இன்னும் பொறுமையோடு காத்திருக்கேன். கடிகார முள் போல ஒரே  இடத்தில் சுத்தி வரேன். பசிக்குது எனக்கும் இப்ப  சீக்கிரம் வந்து சோறாக்கு. கலயாணம் ஆயாச்சு, கால்கட்டா கொழந்தை ஆச்சு.  இப்ப என்னோட தேவையெல்லாம்  சோறும் தூக்கமுந்தான்.  பெரியவங்க யாரும் இல்லை  நம்மோட வந்து தங்க  நமக்கும் பொறுமை இல்ல  பெருசுகளை அனுசரிக்க. நமக்கும் வயசாகும்  அத நெனச்சா பயமாகும். அலுவலக வேலையால இவ்வளவு  தாமதமா?  வேலைய விடச்சொல்ல எனக்கும்  ஆசைதான். மாசக் கடைசி வந்தா மறந்துருவேன்  இத எல்லாம். கொடுக்கற எல்லா கடனும்  கொறையாம வாங்கிபுட்டோம்  வீடு நெறய பொருளாச்சு,   வேடிக்கை பொழப்பாச்சு  என்னோட  காதலி நீ இப்ப  பொண்டாட்டி ஆயாச்சு  காசு இருந்தா காதல் வரும்  காசில்லாம காதல் சினிமாவில்  மட்டும் வரும்.  இந்த புலம்பல்  எல்லாம்  இன்னும்...

ஓட்டம் - Micro Story

கணேசன் பத்தாவது முறையாக டம்ளரில் வெந்நீறையும், உப்பும் கலந்து அது தொண்டையை நனைக்கும் வரை  கொப்பளித்துவிட்டு மறுபடியும் சோபாவில் வந்து அமர்ந்தான். மணி பன்னிரண்டை தாண்டி விட்டது.  அடுக்கு மாடி குடியிறுப்பில் கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகள் மங்கல் ஆக தொடங்கின.  கடந்த நான்கு நாட்களாக கணேசனை சளியும் ஜலதோஷமும் விடுவதாய் இல்லை.  மறுபடியும் ஒரு முறை உள்ளே சென்று பார்த்தான், மகளும், மனைவியும் நன்றாக உறங்கி கொன்டிருந்தனர்.  மறுபடியும் சோபாவில் வந்து உட்கார்ந்தான். தூக்கம் வரவில்லை.  நாற்பதை கடந்து விட்டாலே இது ஒரு இம்சை தான்.   கணேசன் ஒரு தனியார் ஐ  டி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான்.  உலகெங்கும் பரவி இருந்தது அந்த நிறுவனம். வேலை ஒன்றும் அவ்வளவாக கடினம் இல்லை. இந்த 27 வருட அனுபவத்த்தால் எதுவும் புதியதாக தோன்றவில்லை.   புதியதாக ஏதாவது செய்யவேண்டும் என்ட்ற  உந்துதல் பல நாட்களாக கணேசனை தொந்தரவு செய்து கொண்டுருந்தது. அதே நேரத்தில் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் விடாமல் துரத்தி கொண்டிருக்கிறது. இந்த எண்ண ...