Posts

Showing posts from January, 2020

'அது' -'சிவன்'

1.ஆதியும் அந்தமும் இல்லாதது அது     என்னை கொஞ்சம் தொட்டு நகர்ந்தது      மனித ஸ்பரிசம் போன்றதில்லை அது     என்னால் விளக்க முடியாதது அது  2.நானும் அதுவும்  வெவ்வேறில்லை     இத்தனை நாள் இது  தெரியவில்லை     வெளியில் பல முறை தேடிப்பார்த்தேன்     கண்களை மூடி சூரியன் பார்த்தேன்  3.எல்லா படைப்புக்கும் காரணம் உண்டு     அதனின் அமைப்பு எங்கும் உண்டு     காரணம் இன்றி காரியம் இல்லை     சும்மா என்று இங்கு எதுவும் இல்லை  4.எல்லா இயக்கமும் அதனின் இயக்கம்     முடிவு என்பது அடுத்த இயக்கத்தின்     முன் கதை சுருக்கம்,     இதுவே வாழ்கையின் வெற்றி ரகசியம்  5.நம்மிடமிருந்து நாம் விலகி நிற்போம்     நம்மை நாமே தேடிப் பார்ப்போம்     கடனாய் பெற்ற உடலை காப்போம்     நன்றியோடு தினமும் வ...

சாய் வந்தனம் - Tribute to Sai

Image
1.சாயி உந்தன் திருவடி போற்றி  காக்கும் உந்தன் கருணை போற்றி  சீரடி வாழும் சிகரம் போற்றி  கங்கை தரித்த சிவனே போற்றி 2.நோயை தீர்க்கும் மருந்தே போற்றி   எந்தன் வாழ்வில்  வந்தாய்  போற்றி   முந்தைய நல் வினையே போற்றி   துயரம் துடைத்து அருளுக போற்றி 3.உதியால் வினை தீர்த்தாய் போற்றி  எங்கள் இல்லம் நிறைவாய் போற்றி  சுற்றம், நட்பு காப்பாய் போற்றி  நல்ல விருப்பம் நிறைவேற போற்றி 4.பெற்றோர் உடல் நலம் பேணுக போற்றி   பெற்றது நன்றாய் தழைத்திட போற்றி   கட்டிய தாரம் சிறந்திட போற்றி   உடன் பிறந்தோர் அகம் நிறைவாய்   போற்றி 5.பல ரூபம் காட்டும் திருவே போற்றி   எளியோரின் இறைவா போற்றி  அல்லா மாலிக் என்றாய் போற்றி   நீரில் தீபம் ஏற்றினாய் போற்றி 6.நாட்டை செழிக்க செய்வாய் போற்றி   மழையை பொழிக்க வல்லாய்  போற்றி   அமைதி எங்கும் அருளுக போற்றி   நினைவில் நீங்காதிருக்க போற்றி 7.செய்யும் தொழில் சிறந்திட போற்றி   உன்னை அன்றி துணை இல்லை  போற்றி  போதிய வ...

தொடக்கம்

முதலில் நன்றி படைத்தவனுக்கு கருணை நம் மேல் பொழிந்தவனுக்கு இரவு முடிந்தது, விடியல் பிறந்தது  இன்னும் ஒருநாள் வாழக்  கிடைத்தது. புத்தம் புதிய துவக்கம் செய்வோம். வாழ்வின் முதல் நாள் போல நினைப்போம்.  நேற்றைய தவறுகள் நினைக்க வேண்டாம். நாளைய கவலைகள் இன்று வேண்டாம்.  இன்று மட்டும் வாழ்ந்து பார்ப்போம்.  முடிந்த வரையில் முயன்று பார்ப்போம். வெற்றியை கொஞ்சம் வென்று பார்ப்போம்  நன்றாய் தொடங்கி நன்றாய் முடிப்போம்  மறுமுறை ஒருநாள்  வாழ்ந்து பார்ப்போம். -திருச்சிற்றம்பலம்-

E5-Air, Water, Land, Sky and Fire - New Painting - Acrylic on Canvas

Image

இன்பம் விற்பவள்

  மையும், உடையும் ஒப்பனையும்  கலைந்து போச்சு மறுபடியும்  மறுபடி சரிசெய்ய மனமில்லை  உடம்பும் முன் போல் திடமில்லை வேறு வேலை தெரியவில்லை  வேசி வாழ்கை விதியாச்சு  வயிறு வளர்க்கும் வழியாச்சு  நோயும் இங்கே துணையாச்சு  காசு கொடுத்து காமம் தேடலும்  காசு வாங்கி கற்பை இழப்பதும்  இன்று நேற்று நடப்பதல்ல  இரவு எனக்கு பகலாச்சு  விடியல் என்பது கனவாச்சு  சிறுவன், குமரன், கிழவன் என  ஆயிரம் ஆண்களை பார்த்தாச்சு  அத்தனை அழுக்கும் சுமந்தாச்சு  நான் ஏன் எப்படி இத்தொழிலில்?  விருப்பமோடு வரவில்லை.  என்னை விற்கப்பட்டது நினைவில்லை. அண்ணன், தம்பி எனக்கில்லை  'அக்கா', 'மாமா' என்பதெல்லாம். ஆசையாய் அழைகும் உறவில்லை. மனுஷியாய் என்னை  மதிப்பதில்லை ........... இது இன்னும் தொடரும்... இதற்கு மேல் இன்று எழுத இயலவில்லை....

"Tribe in Sprit"

Image
My new painting - Tribe In Sprit - Depicting Shiva. Shiva,  the supreme power.. 

My little steps in to the world of Abstract Paintings... Interesting...

Image
Below are some of the abstract( existing only as an idea, not as a physical thing. )paintings I have made in recent times.   Unlike the traditional paintings,  abstract painting lets the painter experiment more in color,  shade, design etc.  It does not have any boundries and convey the emotions and feelings and mood of the painter.  It should in some way convey th personity of the painter based on the colour,  shades, and frequent shapes used in the paintings.  Not sure if any such study exists.  I have started this journey and it is evolving and exploding.. more than anything else it is a great stress buster... keep checking my posts and enjoy the paintings and do not forget get to leave a feedbak.