Posts

Showing posts from September, 2021

பாஞ்சலி -Paanchali

Image
துரியோதனன் - சகுனி ஐவரை வெல்ல வேண்டும்,மாமா! அவர் குலம் அழிக்க வேண்டும் அதற்கு ஒரு வழி சொல் என்றான். போரிடத் தேவையில்லை, மருமகனே! அவர்க்கு சூழ்சி வலை விரிப்பேன் பகடைக்கு வீழ வைப்பேன், அவர் தேவியை உனக்கு பரிசளிப்பேன்! சகுனியும் கொக்கரித்தான் கௌரவர் குலத்திற்கு குழி பறித்தான். துரியோதனன் - திருதராஷ்டிரன் மன்னனே, என் தந்தையே கேள்.  ஐவரை சூதுக்கு அழைப்போம். அழைப்பிதழ் அனுப்பி வைப்போம். அவர் வரவுக்கு காத்திருப்போம். சூதிலே தோற்கடிப்போம். அவர் குல வதுவை நாம் நோகடிப்போம். மன்னனின் ஆணைதேவை. மற்றதெல்லாம் மாமன் வேலை. நாங்கள் முடிவெடுத்து விட்டோம். இனி முடிவில் மாற்றமில்லை. பெரியவர், ஆசான், சான்றோர், எவரையும் கேட்பதற்கு இல்லை. மன்னனின் ஆணை தேவை.  மறுப்பை ஏற்க இயலாதென்றான். திருதராஷ்டிரன் சூதெதற்க்கு ஆட வேண்டும்? சூழ்சி ஏன் செய்ய வேண்டும்? அமைதி ஏன் குலைக்க வேண்டும்? அழிவை ஏன் தேட வேண்டும்? பாண்டவர்க்கு நாம் ஏன் இந்த பாவத்தைச் செய்ய வேண்டும்? பேரிடர் நிகழும் முன்னே பிள்ளையை காக்க வேண்டும். பாவி சகுனியின் பிடியில் இருந்து சந்ததி மீள வேண்டும். ஆயிரம் கேள்விகள்,ஆசைகள் எழுந்தன மனத...

Haiku Tamil

Image

Hindi Poem Series

Image

Hindi Poem Series

Image

Hindi Poem Series

Image