Posts

Showing posts from October, 2021

My Abstracts collection Acrylic on Canvas

Image

First day of a new born baby. Baby sleeping on a craddle besides mother. Something which goes in childs mind.... Just an imagination

முத்தமிட ஆசை,அம்மா! என்று சத்தமிட ஆசை. எட்டித் தொட்டு விட ஆசை. தோளில் தொற்றிக்கொள்ள ஆசை தொட்டில் விட்டு இறங்கிவிட ஆசை மருத்துவச்சி தலையில் குட்டு விட ஆசை தூக்கி கொஞ்ச வரும் சுற்றம் விலகி நிற்க ஆசை அப்பாவின் கொஞ்சல் எல்லாம் அள்ளிக்கொள்ள ஆசை. என் இஷ்டம் போல் பெயர் இட்டுக்கொள்ள ஆசை ஆணா பெண்ணா அலியா என்றறிந்து கொள்ள ஆசை காதில் விழும் சத்தம் புரிந்து கொள்ள ஆசை கருவறையில் பெற்ற சுகம் இனி தொடரும் என ஆசை. .....

6 October 21

ஆதி அந்தம் இல்லா அருட்கடல் அண்ணாமலை எனும் அக்னிப் பெருங்கடல் தேவார மூர்த்தி நீ, திருவாசகத் தேன் நீ அம்பலவாணன் நீ, அருட்பெரும் ஜோதி நீ அழைக்கிறேன் உன்னை அருள் செய்ய வேண்டும் துதிக்கிறேன் உன்னை துணை செய்ய வேண்டும்  ஆடிக் களித்தோம், வெறுமையில் கூடிக் களித்தோம் அழகின்பின் ஓடிக் களைத்தோம், வீணே உறங்கிக் களைத்தோம் ஓயாமல் பேசிக் களைத்தோம், வாழ்கை தொலைத்தோம் சிவன் என்னை காண வேண்டும், சீக்கிரம் காக்க வேண்டும்  வேள்வி பூஜை எல்லாம் வெறும் வெட்டி வேலை ஆச்சு ஊராற்கு காட்டும் உத்தம வேடம் ஆச்சு சில்லறை செலவிட்டு சிவன் வாங்கும் வேலை ஆச்சு சிவனை அறியவில்லை போதை இன்னும் தெளியவில்லை  மனது என்பது புரியவில்லை, மருந்தேதும் தெரியவில்லை பெண்ணாசை புரியவில்லை, புதிதாய் ஏதும் நடக்கவில்லை சாக்கடையில் உழன்றேன், சந்தனம் போல் அணிந்தேன் சிவன் என்னை அடையவேண்டும், சிந்தனை தெளியவேண்டும் ஊசி முனை அளவு போதும் உன்னருள் உள்ளம் தெளிய இவ்வளவு போதும் திருவருள் உடல் என்னும் தடை உடைய தேவை சிவன் அருள். என்னை இழக்க வேண்டும், உன்னில் கலக்க வேண்டும். உடல் செய்யும் பயணம் இனி இப்படித் தொடர வேண்டும். அன்பே சிவம்...

5th Oct 21

கண்ணே உன் பார்வ பட்டு நான் கவி ஆனேன். சாமி நெஞ்சில் வந்தது போல் மனசெல்லாம் பூவானேன். நெசமா இது? தெரியலையே! கிள்ளிப் பார்த்தேன் வலிக்கலியே முகம் பார்க்கும் கண்ணாடி முழுசும் இப்போ என் முகம்தான். இப்போதெல்லாம் சந்தோசம்தான், எப்போதும் உன் நேசம்தான். அடி,ஆனேன் நான் பைத்தியமா.. இது ஆள கொல்லும் வைத்தியமா? அடுத்தது என்ன தெரியலையே அவசரம் இன்னும் அடேங்கலியே போதை இன்னும் தெளியலியே என் வாழ்க்கைக்கு நீதான் வழித் தடமா? உன் பார்வை என்ன தேர் வடமா?