Posts

Showing posts from January, 2023

அடியேன்

இந்த பொங்கல் வந்தால் ஐம்பத்து ஐந்து வயது கடந்து விடும். கொடிக் கம்பத்தின் கீழ் சற்று இளைப்பாரலாம் என உட்காந்தவருக்கு வயதின் ஞாபகம் ஏன் சட்டென்று வந்தது என தெரியவில்லை. முன் நெற்றி வியர்வையை துடைத்தபடியே யோசித்த போது பதினைந்து,பதினாரு வயதில் அப்பாவுடன் முதலில்கட்சி கூட்டத்திற்கு போனது நினைவு வந்தது.. தலைவர், தலைவர் என்று அப்பா ஓடியது, கொடி கட்டவும், ஆள் சேர்க்கவும் அலைந்ததும் நேற்று போல் உள்ளது. அப்பாவிற்கு பிறகு இவர். தலைவரின் மொழிப் பற்று , தலைவரின் பேச்சு, சொன்ன உண்மையான பொய்கள் அனைத்தும் கவர்ந்தது. மாணவர் அணி, இளைஞர் அணி என்று படிப் படியாக முன்னேறியதில் படிப்பு பாழானது..தலைவர் முன்னிலையில் திருமணமும் , பிள்ளைக்கு தலைவன் பெயர் வைத்ததும் தவிர வேறு ஒன்றும் பெரிதாய் நடக்கவில்லை . கூட்டதுடன் ஓடி ஓடி, ஒன்றும் புரியாமல் கோஷமிட்டு தலைவன் அழைப்பை ஏற்று போராடி அடிவாங்கியதுதான் மாறி மாறி நடந்தது . இன்னும் ஒரு கவுன்சிலர் பதவி கூட பிடிக்க முடியவில்லை. இது ஒரு மாதிரியான போதை, புலி மேல் செய்யும் சவாரி. நேரம் ஆக ஆக மீள்வது கடினம்.கரை வேட்டியும் அது தரும் போதையும் மற்றவர்களுக்கு புரியாது.  வ...

தேடல் - Micro Story

"ப்ளீஸ், ஸ்டார்ட் தி மெடிடேஷன்" என்று எதிரில் உட்கார்ந்து இருந்த பெரியவர் சொன்னதும், கண் மூடி உட்கார்ந்து இருந்த நான் இதய மத்தியில் உள்ள தெய்வீக ஒளியை தேட ஆரம்பித்தேன். மூன்று மணி நேரம் கிரிக்கெட் போட்டியும், சினிமாவும் முழு கவனத்தோடு பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு முப்பது நிமிடம் கண் மூடி உட்கார இயலவில்லை. தியானம் ஆரம்பித்த அடுத்த வினாடி எப்போதும் இல்லாத எண்ண அலைகள் எங்கிருந்தோ வந்து தாக்கத் தொடங்கின. காலிங் பெல் சத்தமும், வீட்டில் உள்ளவர்கள் பேச்சு சத்தமும் தியானம் செய்ய உட்காரும் போதுதான் மிக நன்றாக கேட்கிறது. இந்த எண்ண அலைகளுக்கு நடுவே தெய்வீக ஒளியை தேடுவது மிகவும் கடினமாக இருந்தது. அடுத்த முப்பது நிமிடங்கள் எப்போது முடியும் என்ற தவிப்பும், தெய்வீக ஒளி தெரிந்த பின் என்ன செய்வது என்கிற நினைப்பும் ஒரு வித பதட்டதை ஏற்படுத்தின. கண் மூடி தியானம் செய்வதும் ஏதோ ஒன்றை அடையும் நோக்குடன்தானோ? இது கோவிலுக்கு செல்லாமல் செய்யும் பண்ட மாற்று வியாபாரமா? கண் மூடி உட்கார்ந்ததில் முப்பது நிமிடங்கள் போனதே தெரியவில்லை. "தட்ஸ் ஆல் " என்ற பெரியவரின் குரல் கேட்டு கண் திறந்து போது.. ...

பயணம்

கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. எழுபத்தி ஐந்து வருடமாக ஒரே இடத்தில் இருந்தாகி விட்டது. இந்த வீடு இரண்டு வருடமாக கொஞ்சம் கொஞ்சமாக சிதிலம் அடைந்து கொண்டு இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பது கட்டளை..கிளம்ப கடந்த இரண்டு நாட்களாக ஆயத்தம் செய்தாகி விட்டது. இரவு 11.58 க்கும் 11.59 க்கும் இடைப் பட்ட நேரத்தில் விலகி 6 அடி உயரத்தில் மிதந்து கொண்டு இருந்த போது, 75 வயது சர்தார்ஜியின் மனைவியும்,மகனும் பெரும் குரல் எடுத்து அழுது கொண்டு இருந்தனர்.. அக்கம் பக்கத்தில் உள்ள பிளாட்களில் இருந்தவர்கள் வந்து "க்யா ஹுவா ", கப் ஹுவா என்று விஜாரித்துக் கொண்டு இருந்தனர். முன் வழுக்கை தலையோடு ஸ்வெட்டர் அணிந்த ஒரு முதியவர் " வாட் ஹேப்பன்ட், ஷுட் வி கால் டாக்டர் " என்று ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டு இருந்தார். மெல்ல, மெல்ல செல் போன்களில் செய்தி தெரிவிக்கப் பட்டது. மிதந்து கொண்டு இருந்த அது நடப்பது அத்தனையும் கவனித்துக் கொண்டு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உறவினர் வர தொடங்கினர்.. உடலை ஹாலில் கிடத்தி, மகன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் சூடான ...

கேள்வி

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை உயிருடன் இருக்கும் தாடி சாமியார் விளக்கி சொல்லிகொண்டு இருக்க, உயிருடன் இருக்கும் கேள்வி கேட்டவரும் நானும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்..இந்த கேள்விதான் உலகத்தில் மிக அதிகமாக கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கும். ஒவ்வொரு முறை பதில் பெற்ற பின்பும் பெரிதாய் ஒன்றும் மாறவில்லை.. கூட்டம் முடிந்து சமோசா சாப்பிட்டு வீட்டிற்கு சென்றதைத் தவிர. இது ஒரு விதமான ஏமாற்றும் வேலை. எந்த பதிலும் சரியானது இல்லை என கேட்பவருக்கும், பதில் சொல்லுபவருக்கும் நிச்சம் தெரியும். இதை விட எப்பொழுது மரணம் நிகழும் என்பதை துல்லியமாக அறிய முடியுமா என கேள்வி கேட்கலாம்.. அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் சாமியார்...இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டாலும் என்ன செய்து விடுவார்கள் என தெரியவில்லை...

நிருபன் - மைக்ரோ ஸ்டோரி

கதிரேசன் ஐந்தாவது முறையாக பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய சோம்பல் முறித்து முனகியபடி பைக் ஸ்டார்ட் ஆனது.  அலுவலகம் விட்டு கிளம்பி அடுத்த ஐந்தாவது நிமிடம் சாலையோற டீக் கடையில் நிறுத்தி, "ஒரு கிளாசிக் மைல்டு குடுப்பா " என்று சொல்லி வாங்கி பற்ற வைத்து புகை இழுத்த போது மணி காலை 10.55.. இன்னும் நாற்பது நிமிடத்தில் காவி கட்சி அலுவலகம் சென்றடைய வேண்டும்.  அவசரத்தில் ஹெல்மெட் கழட்டாமலே சிகரெட் இழுத்துக் கொண்டு இருந்தது நினைவு வந்தது. ஹெல்மெட் போல இந்த பத்திரிகை நிருபர் வேலையும் இம்சைதான்.  கதிரேசனுக்கு திண்டிவனம் பக்கம் பூர்வீகம், அப்பா அரசு பணியில் ஓய்வு பெறுவதை நோக்கி ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். கதிரேசன் வம்சத்தில் முதல் பட்டாதாரி. சின்ன வயது முதலே சினிமாவும், அரசியலும், தமிழும் நன்றாக அவனை செதுக்கி இருந்தன. திண்டிவனம் அப்படி ஒன்றும் பரபரப்பான இடமும் இல்லை.  அரசினர் கலை கல்லூரியில் பி ஏ தமிழ் படித்து, தனியார் செய்தி தொலைகாட்சி ஏற்படுதிய தாக்கத்தால் எப்படியாவது பத்திரிகை நிருபர் ஆக வேண்டும் என முடிவு செய்தான். தினமும் இரவு 9 மணிக்கு ஒரு வட இந்தியன் ஐந்து, ஆறு பேரை கூட்...

தனிமை..

காலிங் பெல் சத்தம் கேட்டு கண் விழித்த போது, " அம்மா, தண்ணி கேன் கொண்டு வந்து இருக்கேன் " என்று வழக்கமாக வரும் ஆள் நின்று கொண்டு இருந்தான்.  டிவியில் சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது, யாரோ யாரையோ பழி வாங்க வேண்டும் என்று ஒரு தடிமனான பெண் கண்களை உருட்டி வசனம் பேசிக்கொண்டு இருந்தாள்.. வந்த ஆள் தண்ணி கேன்களை வைத்துவிட்டு நகர்ந்த போது மணி காலை பதினொன்று.  டிபன் சாப்பிட்டு விட்டு ஓய்வு நாற்காலியில் உட்கார்ந்ததுதான் ஞாபகம் இருந்தது சாந்தா அம்மாவிற்கு... இந்த ஜனவரியோடு கணவன் இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது.   சிரோசிஸ் லிவர் வந்து நான்கு வருடம் அவஸ்தை பட்டு போன வருடம் , மூன்று நாள் நினைவு இழந்து அமைதியாக இறந்து போனார். அவர் இருந்த வரை அவரை கவனிப்பதிலேயே பாதி நேரம் போய் விடும்.  மனதில் ஒரு தைரியம் இருந்தது, வாழ்கையில் ஒரு பிடிப்பு இருந்தது. கடந்த ஒரு வருடமாக ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது. இவள்தான் என் அம்மா. அப்பாவின் மறைவு அவளை மெல்ல அமைதியாக்கியது. பேச்சில் ஒரு கனிவும், பேரன், பேத்திகளின் நினைவும், கவலையும் அதிகமாகியது. தனக்கு என்று ஒருவர் இல்லை என்பது அவள் பேச்சில் தெரிந்தது. ...

கிருஷ்ணார்பணம்..

"இனிமேல் எல்லோரும் வழக்கம் போல எல்லா பண்டிகையும் செஞ்சிக்கலாம், எல்லா கோவிலுக்கும் போகலாம், மொதல்ல உங்க குல தேய்வ கோவிலுக்கு குடும்பதோட போய்ட்டு வாங்கோ.. நான் அப்ப கிளம்பறேன், சந்தோஷம்...!! " என்று சொல்லிவிட்டு சாஸ்திரிகள் கூட வந்த சிஷ்யர்களோடு தட்சினை இத்யாதிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்று விட்டார்.  ஹாலில் வைத்து இருந்த படத்தில் அப்பா இன்னும் சிரித்துக்கொண்டு இருந்தார். அப்பா இறந்து ஒரு வருடம் முடிந்து செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் செய்து முடித்து விட்டு, கடைசியாக நவக்ராஹ ஹோமத்துடன் செய்து முடித்தாகிவிட்டது.  அப்பாவின் பயணம் இத்துடன் முடிந்ததாக சாஸ்திரிகள் சொல்கிறார். வேறு ஒரு இடத்தில் அந்த உயிர் ஜனனம் எடுத்து இருக்குமோ? இல்லை இன்னும் இங்கேயே இருக்குமோ? ஒரே குழப்பமாக இருந்தது. இனிமேல் ஒவ்வொரு அம்மாவாசை தினம்தான் அப்பாவின் நினைவு வருமோ? நாள் பட நாள் பட அதுவும் குறையுமோ...? சர்வம் கிருஷ்ணார்பணம்!  என்று சொல்லி சீக்கிரம் எள்ளும் தண்ணியும் விட்டு விட்டு வேறு வேலைக்கு ஓட நேருமோ?அடுத்தவர் மரணம் மெல்ல மறக்கும், துக்கம் மெல்லத் தொலையும்,  தன் மரணம் பற்றிய கவலை தோன்ற...