5th Oct 21

கண்ணே உன் பார்வ பட்டு நான் கவி ஆனேன்.
சாமி நெஞ்சில் வந்தது போல் மனசெல்லாம் பூவானேன்.
நெசமா இது? தெரியலையே!
கிள்ளிப் பார்த்தேன் வலிக்கலியே

முகம் பார்க்கும் கண்ணாடி முழுசும் இப்போ என் முகம்தான்.
இப்போதெல்லாம் சந்தோசம்தான்,
எப்போதும் உன் நேசம்தான்.
அடி,ஆனேன் நான் பைத்தியமா..
இது ஆள கொல்லும் வைத்தியமா?

அடுத்தது என்ன தெரியலையே
அவசரம் இன்னும் அடேங்கலியே
போதை இன்னும் தெளியலியே

என் வாழ்க்கைக்கு நீதான் வழித் தடமா?
உன் பார்வை என்ன தேர் வடமா?

Comments

Popular posts from this blog

மரணம், இறைவன்